மூன்று கடினமான கேள்விகள்.. நீண்ட காலமாக ஒரு இளைஞர் வெளி நாட்டில் வேலை பார்த்து வந்தார். அவர் தாயகம் திரும்பிய பொழுது, அவர் பெற்றோரிடம் "ஒரு மார்க்க அறிஞரை காட்டுங்கள், அவரிடம் எனக்கு மூன்று கேள்விகள் கேட்க வேண்டும்" என்றார். * அவரது பெற்றோரும் அவரை ஒரு மார்க்க அறிஞரிடம் அழைத்து சென்றார்கள்.. * இளைஞர்:- நீங்கள் யார்...? என்னுடைய கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியுமா..? * மார்க்க அறிஞர்: நான் அல்லாஹுவின் அடிமை.. இறைவன் நாடினால் உங்களுக்கு பதில் அளிக்க முடியும் என்று நம்புகிறேன்.. * இளைஞர்: என்னிடம் மூன்று கேள்விகள் இருக்கின்றன. * 1. இறைவன் இருக்கிறானா....?அப்படி இருந்தால் அவனின் உருவத்தை காட்டுங்கள்...? * 2. விதி (தக்தீர்) என்றால் என்ன...?? * 3. ஷைத்தான் தீயால் படைக்கப்பட்டவன் என்றால், இறுதியில் அவனை ஏன் தீயால் ஆன நரகத்தில் அல்லாஹ் போடுகிறான். அது அவனுக்கு வலிக்க போவது இல்லை, ஏனென்றல் நரகமும், ஷைத்தானும் தீயால் படைக்கப்பட்டவைகள்.. அல்லாஹ் இதை கூட யோசிக்கவில்லையா...?? * என்று கேள்வியை கேட்ட உடனே, மார்க்க அறிஞர் அந்த இளைஞனை அறைந்தார்.. * இளைஞர்: (வலியோடு) ஏன் என் மேல் கோபம் கொள்...