மனைவியை பாராட்டுங்கள்
"நான் வேலைக்கு போறேன்"…
"என் மனைவி வீட்டுல சும்மா தான் இருக்கா"!
கணவன் ஒருவர், உளவியல் நிபுணரை சந்தித்த போது, நடந்த உரையாடல்…
நிபுணர்: நீங்கள் என்ன வேலை செய்கிறீர்கள்..?
.
கணவர்: ஒரு வங்கியில் அக்கவுண்டன்ட் ஆக பணிபுரிகிறேன்.
*
நிபுணர் : உங்கள் மனைவி..?
.
கணவர் : அவள் வேலை செய்வது கிடையாது. வீட்டில் தான் இருக்கிறாள்.
*
நிபுணர் : குடும்பத்தினர் சாப்பிடுவதற்கு காலை உணவை தினமும் யார் தயாரிக்கிறார்கள்...?
.
கணவர்: என் மனைவி தான். ஏனென்றால் அவள் தான் வேலைக்கு செல்வதில்லையே.
*
நிபுணர் : தினமும் காலை உணவு சமைப்பதற்காக உங்கள் மனைவி எப்போது எழுவார்....?
.
கணவர்: அவள் காலை 5 மணிக்கு எழுவாள். ஏனென்றால் சமைப்பதற்கு முன்பாக வீட்டைச் சுத்தம் செய்வாள். அவள் தான் சும்மா இருக்கிறாளே...!
*
நிபுணர் : உங்கள் குழந்தைகளை யார் பள்ளிக்கு அழைத்துச் செல்வார்கள்..?
.
கணவர்: என் மனைவி தான் குழந்தைகளை பள்ளிக்கு அழைத்துச் செல்வாள். அவளுக்கு தான் வேலையில்லையே.
*
நிபுணர்: பள்ளியில் விட்டு வந்தது பிறகு உங்கள் மனைவி என்ன செய்வார்...?
.
கணவர்: மார்க்கெட்டுக்கு செல்வாள், பின்னர் வீட்டிற்கு வந்து சமைப்பாள், துணி துவைப்பாள். அவளுக்கு தான் வேலையில்லையே
*
நிபுணர்: மாலையில் வீடு திரும்பியதும் நீங்கள் என்ன செய்வீர்கள்....?
.
கணவர்: நாள் முழுக்க ஆபீஸில் இருப்பதால் மிகவும் களைப்பாக இருக்கும். அதனால் நான் ரெஸ்ட் எடுப்பேன்.
*
நிபுணர்: பிறகு உங்கள் மனைவி என்ன செய்வார்...?
.
கணவர்: இரவு உணவு தயார் செய்வாள், குழந்தைகளுக்கு ஊட்டுவாள், பிறகு எனக்கான உணவு தயார் செய்து பாத்திரங்களை கழுவுவது, வீட்டை சுத்தம் செய்து குழந்தைகளை படுக்க வைப்பாள்.
*
*
ம்… காலை முன் எழுந்தது முதல் இரவு வரை வேலை வேலை வேலை… என ஓடும் பெண், ‘"வீட்டுல சும்மா தானே இருக்கா… வேலையே செய்யாம"’ என்று பேசுவது எத்தனை கொடுமை...?
*
மனைவியை பாராட்டுங்கள், ஏனென்றால் அவளின் தியாகங்கள் எண்ணிலடங்காதது.
*
ஒவ்வொருவரையும் மதித்து அவர்களை பாராட்ட, புரிந்து கொள்ள இது உங்களுக்கான ஒரு சந்தர்ப்பம்.
*
”நீங்கள் வேலை செய்கிறீர்களா அல்லது வீட்டில் சும்மாயிருக்கிறீர்களா...?’
*
”ஆம் நான் முழுநேரம் பணியாற்றும் வீட்டிலிருக்கும் பெண். ஒரு நாளின் 24 மணி நேரங்களும் பணியாற்றுகிறேன்.
*
நான் ஒரு மகள்.
நான் ஒரு மனைவி.
நான் ஒரு மருமகள்.
*
நான் ஒரு தாய்.
நான் ஒரு அலாரம்.
நான் ஒரு சமையல்காரி.
நான் ஒரு வேலைக்காரி.
*
நான் ஒரு ஆசிரியர்.
நான் ஒரு செவிலியர்.
நான் ஒரு பணியாளர்.
*
நான் ஒரு ஆயா.
நான் ஒரு ஆலோசகர்.
நான் ஒரு பாதுகாவலர்.
நான் ஒரு நலன் விரும்பி.
*
எனக்கு விடுமுறைகள் கிடையாது.
*
உடல் நிலை சரியில்லை என்றும் விடுமுறை எடுக்க முடியாது. இரவும் பகலுமாய் வேலை செய்ய வேண்டும். எப்போதும் வேலை செய்வதற்கு தயாராகவே இருக்க வேண்டும்.
*
எப்போதும் என்னை நோக்கி வீசப்படும் ‘நாள் பூரா வீட்டுல சும்மா தானே இருக்கே....?’ என்கிற கேள்வியை எதிர் கொண்டபடி...!