இறைத்தூதர் மட்டுமே அறிந்த மூன்று விஷயங்கள்



இறைத்தூதர் மட்டுமே அறிந்த மூன்று விஷயங்கள்
அனஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறியதாவது:
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மதீனாவுக்கு வருகை தந்திருக்கும் செய்தி (யூத மதத்தில் இருந்த) அப்துல்லாஹ் பின் சலாம் அவர்களுக்கு எட்டியது. உடனே அவர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்து சில விஷயங்களைக் குறித்துக் கேட்டார். "தங்களிடம் நான் மூன்று விஷயங்களைப் பற்றிக் கேட்கப் போகிறேன். அவற்றை ஓர் இறைத்தூதர் மட்டுமே அறிவார்'' என்று கூறினார்.  பிறகு, 
1. இறுதி நாளின் அடையாளங்களில் முதலாவது அடையாளம் எது?
2. சொர்க்கவாசி முதலில் உண்ணும் உணவு எது?
3. குழந்தை தன் தந்தையின் சாயலிலோ அல்லது தன் தாயின் சாயலிலோ இருப்பது எதனால்?'' என்று கேட்டார்கள்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், "சற்று முன்புதான் ஜிப்ரீல் எனக்கு இவற்றைக் குறித்து (விளக்கம்) தெரிவித்தார்'' என்று கூறினார்கள்.
உடனே, அப்துல்லாஹ் பின் சலாம் அவர்கள், "ஜிப்ரீல் தான் வானவர்கற்லேயே யூதர்களுக்குப் பகைவராயிற்றே!'' என்று கூறினார்கள்.
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், "இறுதி நாளின் அடையாளங்களில் முதலாவது அடையாளம் ஒரு நெருப்பாகும். அது மக்களைக் கிழக்கிலிருந்து (துரத்திக் கொண்டு வந்து) மேற்குத் திசையில் ஒன்று திரட்டும்.
சொர்க்கவாசிகள் முதலில் உண்ணும் உணவு பெரிய மீனின் ஈரல் பகுதியில் உள்ள அதிகப் படியான சதையாகும்.
குழந்தை(யிடம் காணப்படும் தாயின் அல்லது தந்தையின்) சாயலுக்குக் காரணம், ஆண் மனைவியுடன் உடலுறவு கொள்ளும் போது அவனது நீர் (விந்து உயிரணு) முந்திக் கொண்டால் குழந்தை அவனது சாயலில் பிறக்கின்றது. பெண்ணின் நீர் (கருமுட்டை உயிரணு) முந்திக் கொண்டால் குழந்தை அவளது சாயலில் பிறக்கின்றது'' என்று பதிலற்த்தார்கள்.
(உடனே) அப்துல்லாஹ் பின் சலாம் அவர்கள், "வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறெவருமில்லை என்றும், தாங்கள் அல்லாஹ்வின் தூதர் தாம் என்றும் நான் உறுதி அற்க்கிறேன்'' என்று கூறினார்கள்.
பிறகு, "அல்லாஹ்வின் தூதரே! யூதர்கள் பொய்யில் ஊறித் திளைத்த சமுதாயத்தினர் ஆவர். ஆகவே நான் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட செய்தியை அவர்கள் அறிவதற்கு முன்னால் தாங்கள் என்னைப் பற்றி அவர்களிடம் கேட்டுப் பாருங்கள்'' என்று கூறினார்கள்.
அப்போது யூதர்கள் (நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்   அவர்களிடம்) வந்தார்கள். (உடனே, அப்துல்லாஹ் பின் சலாம் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் வீட்டினுள் புகுந்து (மறைந்து) கொண்டார்கள்)
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் (யூதர்களிடம்), "உங்களில் அப்துல்லாஹ் பின் சலாம் எத்தகைய மனிதர்?'' என்று கேட்டார்கள்.
அதற்கு அவர்கள், "அவர் எங்களில் நல்லவரும், எங்களில் நல்லவரின் மகனும் ஆவார்; எங்களில் சிறந்தவரும், சிறந்தவரின் மகனும் ஆவார்'' என்று பதிலற்த்தார்கள்.
உடனே, அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், "அப்துல்லாஹ் (பின் சலாம்) இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார் என்றால் நீங்கள் என்ன நினைப்பீர்கள்?'' என்று கேட்டார்கள்.
அதற்கு அவர்கள், "அல்லாஹ் அவரை அதிலிருந்து காப்பாற்றுவானாக!'' என்று சொன்னார்கள்.
மீண்டும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் யூதர்களிடம் முன்பு போலவே கேட்டார்கள். அதற்கு அவர்கள் முன்பு போலவே பதிலளித்தார்கள்.
உடனே (வீட்டினுள் மறைந்து கேட்டுக் கொண்டிருந்த) அப்துல்லாஹ் பின் சலாம் அவர்கள் வெற்யே வந்து, "வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறெவரு மில்லை என்றும் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அல்லாஹ்வின் தூதராவார்கள் என்றும் நான் உறுதி அற்க்கிறேன்.'' என்று சொன்னார்கள்.
உடனே யூதர்கள், "இவர் எங்களில் கெட்ட வரும் எங்களில் கெட்டவரின் மகனும் ஆவார்'' என்று சொல்லிவிட்டு அவரைக் குறித்து (இல்லாத குற்றங்களைப் புனைந்து) குறை கூறலானார்கள்.
(அவற்றைக் கேட்ட) அப்துல்லாஹ் பின் சலாம் அவர்கள், "இதைத் தான் நான் அஞ்சிக் கொண்டிருந்தேன், அல்லாஹ்வின் தூதரே!'' என்று சொன்னார்கள். (நூல் : புகாரி 3938)

Popular posts from this blog

ஆண் குழந்தை பெயர்கள்

கணவன் - மனைவி ஒருவரையொருவர் ‘அதற்காக’ தொடுவதற்குமுன்

பொறாமை" என்றால் என்ன?