நாம் ஆசைப்பட்ட பொருள் அல்லது வாழ்க்கை நமக்கு வாய்க்காமல் போய், அல்லது வாய்ப்பதற்குள்ளாக, வேறொருவருக்கு வாய்ப்பதை நாம் பார்க்கும் போது நம் மனதில் துளிர் விடும் எதிர்மறை உணர்வே "பொறாமை" . * பெரும்பாலும் நாம் ஆசைப்படும் பொருள் அல்லது நிலை நாம் எதிர்பார்க்கும் நேரத்திற்குள் நமக்கு கிட்டுவதில்லை. அது நமக்கு கிட்டுவதற்கான காலமும் சூழ்நிலைகளும் கைகூடி வரும் போது நிச்சயமாக கிட்டும் . அதற்குள்ளாக அது வேறு ஒருவருக்கு கிட்டியதைக் கண்டவுடன் அவர் மீது வெறுப்பு கொள்கிறோம். நாம் எதிர்பார்ப்பது நமக்கும் தகுந்த நேரத்தில் கிடைக்கும் என்ற நம்பிக்கையை இழந்து விடுகிறோம், * நம்பிக்கையை இழப்பதால் நாம் செய்ய வேண்டியதைச் செய்யாமல் விட்டு நம் வாய்ப்புக்களில் நாமே மண் அள்ளிப் போட்டுக் கொள்கிறோம். நம்முடைய நேரம் வரும் வரை நமக்கு பொறுமை இல்லை. பொறுமை இல்லா இந்நிலையே "பொறாமை". * மற்றவர்களுடன் நம்மை ஒப்பிட்டுப் பார்த்துக்கொள்ளும் குணம் இதற்கு முக்கிய காரணம், எல்லோருக்கும் முன்னால் நமக்கு அது கிடைக்க வேண்டும், எல்லோரையும் விட நம்மை பெரியவனாக காட்டிக்கொள்ள வேண்டும் என்பது போன்ற சிந்தனைகள். ...