மண்ணறையில் நமது வாழ்க்கை


இனி தனிமையில்
இந்த மண்ணறையில் தான்
நமது வாழ்க்கை......

எல்லோரும் சில காலம் தான் 
நம்மை நினைத்துக்கொண்டிருப்பார்கள்...

அதன் பிறகு நம்மை மறந்து விடுவார்கள்..

நமது சந்ததியினருக்காக நாம் பட்ட கஷ்டங்கள்,
நாம் வைத்திருந்த உயர்ந்த ரக கார்கள்,
நமது சொகுசு மாளிகை, நமது பணம்....

எதுவும் நமக்கு உதவப்போவதில்லை....

நம்முடன் இன்பத்தில் பங்கு கொண்ட 
நண்பர்கள் நம்முடன் இல்லை.......

பண பலத்துடன்,
நாம் வளம் வந்த பொழுது,
நம்மைச் சுற்றியிருந்த உறவுகள்
நம்முடன் இல்லை.....

உலக வாழ்க்கை சில காலம் தான்....

மண்ணறை வாழ்க்கையே நிரந்தரம்...

நாம் செய்த "நல்ல அமல்கள்" மட்டுமே
நமக்காக பரிந்துரைக்கும்....

அது மட்டுமே,
நமது மண்ணறை வாழ்க்கையை
சிறப்பாக வைத்திருக்கும்....

Popular posts from this blog

ஆண் குழந்தை பெயர்கள்

கணவன் - மனைவி ஒருவரையொருவர் ‘அதற்காக’ தொடுவதற்குமுன்

பொறாமை" என்றால் என்ன?